சனி, 4 ஏப்ரல், 2015

கலையாத கனவுகள் - 19வது அத்தியாயம்

http://en.calameo.com/read/00288346942c164c1d892

29 கருத்துகள்:

  1. சம்யுக்தா, மறுபடி சீட்டு நுனியில் உக்கார வச்சிட்டு போயிட்டீங்களே:( அன்பழகன் சைத்தன்யனுக்காக அடிக்கிய நியாயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.
    இருந்தாலும் சைதன்யன் மேல் பரிதாபம் தான் தோன்றுகிறது.

    லாரஸ் அந்நிலையிலும் (அதாவது ரிதுவின் குழப்ப நிலையில் ஏதோ ஒரு சிறு தூண்டுதல் கூட அவளை சைதன்யனிடம் சேர்த்து வைத்து, தன் காதலுக்கு சமாதி கட்டி விடும்), தன் வலியை மறைத்து, உளப்பூர்வமாக அவளை வழியனுப்பி வைப்பது, பரிதாபத்தை மீறி எங்கள் பேராதரவை அள்ளி குவித்துவிட்டான். லாரஸ், உனக்கு ரிது கிடைக்காவிட்டால் கூட கவலை படாதே. கண்டிப்பாக உனக்கு இருக்கும் உலக அனுபவத்துக்கு, பக்குவத்திற்கும், உன்னால், இவை அனைத்தும் passing clouds னு, வாழ்வின் அடுத்த நிலைக்கு சிறுது கால அவகாசத்திற்கு பிறகு, சென்று விட முடியும்.

    சரி, யாருக்கு ரித்து கிடைக்க வேண்டும் ? கண்டிப்பாக, தற்போது தான் தனக்காக வாழ தொடங்கி இருக்கும் சைத்தன்யனுக்கு கிடைக்க வேண்டும் என்று சொல்கிறது உணர்ச்சிகளுக்கும் பரிதாபத்திற்கும் அதிக மதிப்பளிக்கும் ஒரு பக்க மனசு.
    அப்படியானால் ரிது வெறும் பரிசு போல் அல்லவா தோன்றுவாள்.... அதுமட்டுமல்ல தற்போதைய வலி + பாதிப்பை மட்டும் பார்க்காமல் மூவரின் வாழ்க்கையே அடங்கி இருக்கிறது என்று நினைத்துப்பார் என்கிறது அறிவு + இன்னொரு பக்க லாரஸ்க்கு ஆதரவு அளிக்கும் மனசு.

    ஐயோ முடியலையே. பேசாம ரிதுவை சன்யாசம் வாங்கிட சொல்லுங்க:)

    சீக்கிரம் அடுத்த அத்தியாயம் கொடுங்கள், pls.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரதி

      நீங்கதான் கதையை கெஸ் பண்ணிட்டீங்களே... அதனால சீட் நுனியில உட்காராம நல்லா ஹாயா உட்காருங்க ;)
      //பேசாம ரிதுவை சன்யாசம் வாங்கிட சொல்லுங்க:) // ஹ ஹ ஹா இதை நான் எதிர்பார்க்கலை... பெஸ்ட் சாய்ஸாதான் தோணுது... சொல்லிப் பார்க்கிறேன்... ஆனா கேட்பாளான்னு தெரியலை..

      ஆக மொத்தம் உங்க ஆதரவு யாருக்குன்னு எனக்கே புரியலை, ரிதன்யாவுக்கு உங்க சார்பில ஐடியா கொடுக்க முடியாது போலிருக்கே....

      கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ரதி

      அடுத்த இரண்டு அத்தியாயங்களும் நாளைக்குத்தான்பா... ஓரளவு நேத்தே முடிச்சிட்டேன், ஆனா கம்ப்ளீட் ஷேப் வரலை... அதுவுமில்லாம ரொமான்ஸ் ரொம்பவே அதிகமாப் போயிடுச்சு... தேவையான அளவு குறைச்சு நாளைக்குக் கொடுத்திடறேன்பா

      நீக்கு
  2. வணக்கம் சம்யுக்தா,
    இந்த அத்தியாயம் படித்து முடித்தவுடன் ஐயோ பாவம் ரியா என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

    ஒரு வேளை அவளின் கல்லூரி பருவத்தில் சைதன்யா உடனான திருமணம் பந்தம் முடிவாகி இருந்தால் கண்டிப்பாக அவள் மகிழிச்சியின் உச்சத்தில் இருந்திருப்பாள். ஆனால் காலம் கடந்த வேலையில் அவள் கண்ட கனவு நனவாகும் போது அவளால் ஒரு சின்ன சந்தோஷம் கூட அடைய முடியவில்லை.

    அன்பழகன் சைதன்யாக்காக பேசும் வார்த்தைகள் நிஜமான உண்மையே, சைதன்யாவின் அன்றய அவனின் கடமைகள், அவனின் நிலப்பாடு ஒத்துக்கொள்ள முடிகிறது.. அதுவும் சைதன்யா லாரஸ் உடனான ஒப்பிடு நூற்றுக்கு நூறு உண்மையே.. ஆனால் "பச்சோந்தி போல நிறம் மாறிட்டு இந்த காலத்து பொண்ணுன்னு ப்ரூஃப் பண்ணிட்டே" அன்பழனின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.
    ஒரு வேளை சைதன்யாவுக்கு திருமணம் முடிந்தியிருந்தால் இதே அன்பழகன் கண்டிப்பாக என்ன ரியா திருமணம் ஆனவனை இன்னும் நினைத்துக் கொண்டு இருக்கியா, என்ன பொண்ணு நீ என்று கேட்டு இருப்பான்.

    லாரஸ் - என்னமோ போடா மாதவா!! இந்த பயப்புள்ளையை நினைச்சா தான் கஸ்டமா இருக்கு... சைதன்க்கு ஆச்சும் இப்போ தான் ஃபீலிங்க்ஸ் ஆஃப் இன்டியா வந்து இருக்கு, இந்த புள்ள வருஷா கணக்கா பீலிங்சா புழிஞ்சிகிட்டு இருக்கு, இதோட கதி என்ன??? மாரியாத்தா ரியாக்கு ஒரு நல்ல புத்தியை கொடு ஆத்தா!!!

    சம்யுக்தா வாங்க வாங்க...
    அன்புடன்
    Jass

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாஸ் ...

      மிக்க மிக்க நன்றிப்பா.... மீண்டும் ஒரு தெளிவான அலசல், சரியாகத்தான் எழுதியிருக்கிறேன் என்று நானே தெரிந்து கொள்ள உதவியது...

      அன்பழகனோட பேச்சை நிச்சயம் கண்டிச்சிடுவோம்... அவனோட நல்ல நேரம் ரிதன்யாவோட கெட்ட மூடால தப்பிச்சிட்டான்... இல்லைன்னா அவளே போட்டுத் தாக்கிருப்பா...

      //மாரியாத்தா ரியாக்கு ஒரு நல்ல புத்தியை கொடு ஆத்தா!!! // ஹ ஹ ஹா ரியாவோட நிலைமை இப்படி ஆயிடுச்சா...

      உங்களோட திட்டுக்களையும் பாராட்டுக்களையும் ரொம்ப ரசிச்சேன் ஜாஸ்... நன்றி

      நீக்கு
  3. ஆஹா சம்யுக்தா,
    உங்களின் போன அத்தியாயத்திற்க்கான பதில்களை படித்த போது பல துப்புக்கள் கொடுத்திருந்தீர்கள். ஆர்கிமிடிஸ் "யுரேக்கா ,யுரேக்கா " என்று கத்திக்கொண்டு ஓடியதை போல(ஒரு உதாரணத்துக்காக சொன்னேன்.. ஹி.. ஹி..) , நானும் கண்டுபிடித்துவிட்டேன் என்று கத்த தோன்றுகிறது.

    நான் யாருக்கும் சேதாரம் இல்லாமல் ஒரு முடிவை யூகித்து வைத்திருக்கிறேன். நான் இங்க சொல்ல மாட்டேன். இக்கதை ரசிகர்களோடு ரகசியமாக கலந்துரையாட போகிறேன்;-) பார்ப்போம் என் கற்பனை குதிரையின் திறனை.

    ஆனாலும் என் எழுத்து நடை நல்லாஇருக்குன்னு சொல்லிட்டு போய்டீங்க. ஐயையோ, இந்த பேர காப்பாத்துறதுக்கு, அகராதியை வைத்து சரிப்பார்க்க வேண்டியதா இருக்கு:-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேய் ரதி... அப்ப மெதுவா கிளைமேக்ஸ் கொடுத்தாப் போதும் தானே.... ரகசியமா நாம மட்டும் வச்சுப்போம் ;)
      ரொம்ப அழகா எழுதறீங்கப்பா.... நீங்க ஏன் கதை எழுத டிரை பண்ணக் கூடாது? விளையாட்டுக்குக் கேட்கலை... இது மாதிரி என்னைக் கேட்டுத்தான் நானும் எழுத வந்தேன்... வார்த்தைகளோட கோர்வை, சொல்ல நினைக்கிறதை சரியா சொல்றது, குணாதிசயங்களோட அலசல் எல்லாமோ உங்ககிட்ட அருமையா இருக்கு... அகராதியைத் தூக்கி வச்சுட்டு, கற்பனைக் குதிரையைத் தட்டிவிட முயற்சி பண்ணுங்க

      நீக்கு
    2. ஹேய் ரதி... அப்ப மெதுவா கிளைமேக்ஸ் கொடுத்தாப் போதும் தானே.... ரகசியமா நாம மட்டும் வச்சுப்போம் ;)
      ரொம்ப அழகா எழுதறீங்கப்பா.... நீங்க ஏன் கதை எழுத டிரை பண்ணக் கூடாது? விளையாட்டுக்குக் கேட்கலை... இது மாதிரி என்னைக் கேட்டுத்தான் நானும் எழுத வந்தேன்... வார்த்தைகளோட கோர்வை, சொல்ல நினைக்கிறதை சரியா சொல்றது, குணாதிசயங்களோட அலசல் எல்லாமோ உங்ககிட்ட அருமையா இருக்கு... அகராதியைத் தூக்கி வச்சுட்டு, கற்பனைக் குதிரையைத் தட்டிவிட முயற்சி பண்ணுங்க

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. சம்யுக்தா,
      ஐயையோ!! தெரியாம சொல்லிட்டேன். என் யூகம் சரியான்னு தெரிஞ்சுக்கவாவது, நீங்க சீக்கிரம் அடுத்த அத்தியாயம் கொடுக்கணும், pls.

      என் கருத்தை பாராட்டியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. என்னால் ஒரு சம்பவத்தை அதன் உணர்வு + உண்மை தன்மை மாறாமல் & சுவாரஸ்யம் குறையாமல் எழுத்து வடிவத்தில் கொடுக்க முடியும் என்று என்றாவது தோன்றினால் கண்டிப்பாக எழுத முயற்ச்சிக்கிறேன்.

      நீக்கு
  4. ஹ ஹா மேடை ரகசியமா!!! ரகசியம் ரகசியமாய் இருக்கட்டும் !!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் ரகசியத்தைக் காப்பாத்த ரதியோட சேர்ந்துட்டீங்களா ஜாஸ்...

      நீக்கு
  5. Samyuktha,
    Appaa layout maathunadhukku romba thanks. Ini reply to each others comment is also easy. English font thaan konjam uruthudhu.

    பதிலளிநீக்கு
  6. adadaa indha pudhu layoutla karuththu udane varaadhu polaye..... evlo neram aagumnu theriyalaye :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புது லேஅவுட்ல உடனே வந்திருக்கும்... நான் தான் பாதி வேலையில செட்டிங்ஸைக் கவனிக்காம ஊர் சுற்றக் கிளம்பிட்டேன்...

      இப்போதைக்கு சின்ன மாற்றம்தான் செஞ்சிருக்கேன்... மெதுவா மெதுமா ஒண்ணொன்னா செய்யறேன்பா...

      நீக்கு
    2. The user experience is very neat and cool. Thanks again.

      நீக்கு
  7. ஹாய் சம்யு,

    ஸாரி,ஒவ்வொரு பதிவாக படிக்க முடிந்த என்னால் ஒவ்வொரு பதிவுக்கும் கருத்து கூற முடியவில்லை.அழகாக நகர்த்துறீங்க.

    சைதன்யனுக்குள், காதல் மெல்ல மெல்ல புகுந்தி மாயம் செய்ய ஆரம்பித்து விடுகிறது.அவன் தந்தை,அவன் விருப்பத்தை யூகித்து விடுகிறார்.அதற்கு அவன் அவர்கள் குடும்பத்தினரின் முடிவே என பொறுப்பை அவர்கள் மீதும் வைக்கின்றான்.

    லாரஸ்ஸின் செயல்களுக்கு, இப்போது தான் வேறு வர்ணம் பூச தொடங்குகிறாள்.அவன் முன்னமே அவளை,அவன் வாழ்க்கைக்கேற்ப தயாரக்கியிருக்கிறான் என்பது காலங்கடந்து தெரிகிறது.

    ஈர்ப்பு அவன் மேல் வந்து விட்டதே என்று அவள் யோசிக்கிறாள்.அவள் அப்படி தொடர்ந்து யோசித்தால் கூட நல்லாதொரு திடமான முடிவை எடுத்திருப்பாள்!!

    சைதன்யன் வீட்டினரிடம் நடந்து மொத்தமாக ஸ்கோர் செய்து விடுகிறாள்.விலையுயர்ந்த பறவையை,தன் தாயின் நினைவாக வளர்த்து வருபவள் தூக்கிக் கொடுப்பது லாரஸுக்கு வருத்தத்தையே அளிக்கிறது.

    ஒதுங்கி ஒதுங்கி போனாலும்,இருவரும் அவளெதிரில் இருப்பதை காண அவள் மனம், விரும்பவில்லை.குற்றவுணர்வில் தவிப்பவளை சரி செய்யும் அவளின் தந்தை பாராட்டிற்குரியவர்.
    அவர் போடும் கட்டளை வேலை செய்யுமா?

    அன்பழகன் பேசுவது கேட்பது,குற்றஞ்சாட்டுவது இந்திய ஆண்களின் குணம் மட்டுமல்ல.இந்திய பெண்களின் குணமும் கூட.

    அவளிற்கும் கேள்விகள் இருக்குதே.ஆனால்,அவள் உணர்வை நன்றாக படித்து வைத்திருக்கிறானே.( லாரஸ் மீதான ஈர்ப்பு,அவனுடையதை தள்ளி வைக்குது)

    அவளை போல்,உள்ள பெண்களை காண்பதரிது.

    பணம்,அழகு,படிப்பு இவைகளில் ஆணோ,பெண்ணோ சிறந்து மெச்சப்பட வகையில் இருக்கும் போது,அவர்கள் எளிமையான மனிதர்களுடன் இயல்பாக பழகுவது அரிது.சைதன்யாவை ரொம்ப பிடித்திருக்குது.

    ஆணுக்கு இருக்கும் அதே சுதந்திரத்தை, பெண்ணுக்கும் அன்றைய காலத்தில் கொடுத்திருந்திருக்கிறார்கள்.இன்று அது மறைந்து போனாலும்,இன்றளவும் தமிழ் பேசும் தொல்குடியினர் பெண்ணுக்கு அதே சுதந்திரத்தை கொடுத்து கொண்டேத் தான் இருக்கின்றனர்.

    ஒருவனுக்கு ஒருத்தி,என்பது அன்றிலிருந்தே இருந்திருக்குமா என்ன??? நிறைய நேரங்களில் கேள்விகள் பல எழுந்து கொண்டே தான் இருக்கின்றன.

    நினைவடுக்கில் தேடுகையில்,காத தூரம் லாரஸ் பின்னால் போய் விட்டான் என நினைத்திருக்கையில் அவன் கண்கலங்கலை பொறுக்கவியலாமல் வருந்தும், ரிதன்யா என்ன விடை கொடுக்க போகிறாள்? ???அது நட்பு கலந்த பாசத்தினால் வந்ததா? இல்லை குற்றவுணர்வினால் வந்ததா? இல்லை காதலினால் வந்ததா?

    ஒவ்வொரு பதிவிலும் அழகாக மனித உணர்வுகளை பத்தி சொல்லுகிறீர்கள் சூப்பர்ப்.

    Psychology முடித்திருக்கிறீர்களா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவி இதுக்கெல்லாம் எதுக்குப்பா ஸாரியை வேஸ்ட் பண்றீங்க...

      பல வேலைகளுக்கு நடுவில நேரம் கிடைக்கும் போது ஒரு கமெண்ட் சொன்னாக்கூடப் போதும்பா... அதுவே எனக்கு சந்தோசம்...

      உங்களுடைய விரிவான அலசல்களுக்கும் தெளிவான கருத்துக்களுக்கும் மிக்க மிக்க நன்றி தேவி

      உணர்வுகளைப் பற்றி எழுதிய விதம் பிடித்திருந்ததாகச் சொன்னதற்கும் நன்றிப்பா

      சைக்காலஜியா! நானா! இல்லை தேவி... என்னுடைய நட்பு வட்டம் கொஞ்சம் பெரியது... மனிதர்களோடு நிறையப் பேசிப் பழகுவதே ஒரு வித அனுபவத்தைக் கொடுக்கிறது... அதனால் உங்களுக்கு இது போலத் தோன்றியிருக்கலாம்...


      நீக்கு
  8. அன்பழகனை போன்றவர்களுக்கு அவள் அருமை தெரிவதில்லை.அதே நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டிய சைதன்யன் சரியாக புரிந்து கொண்டால் நலம்.லாரஸின் வெளிநாட்டு கலாச்சாரம்,அவனை அவள் மேல் பிழையை புகுத்தாது.

    ஆனால்,வெளிநாடு உள்நாடு என எந்த நாடாக இருப்பினும் ஆணுக்கும்,பெண்ணுக்கும் எழும் சில உணர்வுகள் பொதுவானவையே.லாரஸ்ஸக்கும்,அவள் அவனை ஒதுக்கும் நேரங்களில்,அவளை விட்டு கொடுக்க கூடாது என்ற முடிவை தீர்க்கமாகத்தானே எடுக்கிறான்.

    சைதன்யன் இப்போதும்,மெளனம் காப்பதுதிற்கான காரணம்,அவன் அவளை காயப்படுத்திய தருணங்களே.

    நீங்கள் சொன்னார் போல,கடைசி பதிவு வரை அவனா,இவனா ன்னு எங்களையும் குழப்பிடுவீங்க போலவே:-)

    நன்றி.அழகான கதைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தேவி.... ஆண்களில் நிறையப் பேர் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்... அதுவும் பெண்களைப் பற்றி சர்வ சாதாரணமாக கமெண்ட் சொல்லும் இடங்களிலெல்லாம், ஆதிக்க மனப்பான்மை தெளிவாகவே வெளிப்படுகிறது...

      ஆண் என்றால் இப்படி, பெண் என்றால் இப்படி என்று நமக்குள் இருக்கும் வரையறையையே நம்மால் மாற்றுவது கடினம்...

      உங்களோட உள்மனம் யாரைக் கை காட்டுதோ அவங்க தான் ஹீரோ... ;) குழப்பமே இல்லாம இருங்க... நன்றிப்பா

      நீக்கு
  9. Hi mam,blog looks rich.nice to see

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தேவி...
      மேடம்னெல்லாம் கூப்பிடாதீங்கப்பா... ஐயோன்னு அலற வைக்குது... (வயசாயிடுச்சுனெல்லாம் ஒத்துக்க மாட்டேன் தேவி... ;) என்றும் இளமைன்னு சொல்லி காலத்தை ஓட்டிட்டிருக்கேன்)

      நீக்கு
  10. நாளைக்குதான் முடியும் திவ்யா... இரண்டு அத்தியாயங்களைச் சேர்த்து முடிக்க முடியவில்லைப்பா

    பதிலளிநீக்கு
  11. ஹாய் சம்யுக்தா

    ரியாவோட அப்பாவின் பேச்சு திகைக்க வைக்குது.... இப்படியும் ஒரு அப்பாவா....!! பெண்ணுக்காக எவ்வளவு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறார்.... அவள் எது செய்தாலும் கோபப்படாமல்.... அவளுக்கு எது சரியோ, அதை சொல்லி அதை ஏற்றுக்கொள்வது கூட அவளின் விருப்பமே என சொல்வது சூப்பர்..! இந்த மாதிரி ஒரு அப்பா எல்லாருக்கும் கிடைத்து விடாது...! அவர் கொடுத்த சுதந்திரத்தை ரியா மதிக்கணும்.

    ஹாஹா சுயம்வரமா....!! இப்போ 2 பேர் தானே இருக்காங்க... அதுக்கே இப்படியா...!!

    அவளே தெளிவில்லாமல், என்ன முடிவு எடுப்பது என்று திணறும்போது, அன்பழகனின் பேச்சு ஆத்திரம் கொள்ள செய்கிறது... அவனுக்கும் வேண்டுமானால் நண்பன் பெரிதாக இருக்கலாம்.. ஆனால் அவனுக்காக இவளிடம் வந்து இப்படி பேசுவது ரொம்ப ஓவர்... இதுவும் ஆணாதிக்கத்தையே காட்டுகிறது. சைதன்யனின் மனதில் என்ன இருக்கிறது என்று இவளுக்கு எப்படி தெரியும்..? அல்லது அவன்தான் அனுமார் மாதிரி நெஞ்சை கிழித்து காமித்தானா...??

    சைதன்யன் பற்றி லாரசும், லாரசை பற்றி சைதன்யனும் தெளிவாக புரிந்து வைத்து இருக்கிறார்கள்... ஆனால் புரிந்துக் கொள்ள வேண்டிய ரிதாவோ...!!

    கண்களில் வலியோடு சைதன்யனுடன் பேச ரியாவை அனுப்பி வைக்கும் லாரஸ் அழகு... எல்லார் மனதையும் கொள்ளை கொண்டு விடுவான் போல...!!

    பதிலளிநீக்கு
  12. ஹாய் தேனு... கருத்துக்களுக்கு மிக்க நன்றிப்பா..

    நீங்க சொன்ன சுயம்வரத்தை நினைச்சுப் பார்த்தேன்... ஹ ஹ ஹா தலை சுத்திடுச்சு... ரெண்டு பேரை வச்சிட்டே இந்தப் பொண்ணு குழம்புதே, இன்னும் ரெண்டு பேர் இருந்திருந்தா அப்பா சொல்லிருக்காறேன்னு குழம்புமோ என்னவோ ;)
    கொஞ்சம் லாரஸிற்கு சப்போர்ட் பண்ணிட்டீங்க போல... நன்றிப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் சம்யுக்தா

      சுத்தின தலை நின்னுடுச்சா....!! பிடிச்சு நிறுத்துங்க..., இல்லேன்னா எங்களுக்கு நல்ல கதைகள் கொடுக்கும் கதையாசிரியர் கஷ்டபப்டுவார்...!!

      லாரசுக்கு சப்போர்ட் உண்டு... ஆனாலும் அவளின் காதலனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருங்க மீதி கதையும் படிச்சிட்டு வரேன்.

      நீக்கு
    2. கொஞ்சம் சப்போர்ட் பண்ண மனசு வந்திருக்கே தேனு... பாவம்பா லாரஸ்...

      நீக்கு