விமர்சனம்

69 கருத்துகள்:

  1. Hi Samyuktha,

    I have been thinking of visiting your blog for a while, only now found the time. Very happy to see that you have emerged as a full fledged author and have got so many novels under your sleeve. I have'nt read the novels yet. Will surely read them soon and get back to you with my feedback. Amazing growth! Best Wishes and Keep Rocking!

    Cheers,
    VPR

    பதிலளிநீக்கு
  2. ஹாய் அண்ணி

    வருக வருக...

    பல வருடங்களுக்குப் பிறகு உங்களோட கமெண்ட்டைப் பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு.

    உங்களோட வாழ்த்தையும், வருகையையும் நான் எதிர்பார்க்கலை. இனிய அதிர்ச்சி கொடுத்திருக்கீங்க. மிக்க நன்றி.

    நேரம் கிடைக்கும் போது படிங்க. குறைகளாப் படறதை கட்டாயம் ரெண்டு வரியிலயாவது சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  3. ஹாய்..

    சிலரோட எழுத்துகளை படிக்கும் போது தாமதமானாலும் காத்திருக்க தோணும், தாமதம் கதையை நிறைக்கும்னு.. அது உங்க கதைகள்ல நிறையவே இருப்பதாக நான் உணருறேன்..
    இந்த கதைய படிக்க துவங்கும் போது தண்டாரணியம், விடியல் கதைகளே மனச ரொம்ப வருத்துச்சு, இதுல இலங்கை அதிதிகள் கதையா அய்யோனு தா நெனச்சுட்டே படிச்சேன்.. படிக்கும் போது தொண்டைய எதுவோ அடைக்குற மாதிரி இருந்தாலும் மனதை நோகடிக்காத விஷயங்கள் பக்கம் செல்லாமல் அவர்களின் நிலை, உதவ வேண்டுமானால் எப்படி அவர்களுக்கு உதவலாம் இப்படி மட்டுமே காட்டியதற்கு மிக்க நன்றி.. (அவர்கள் பட்ட இலங்கை அவலங்கள் பக்கம் செல்லாமல் விட்டதற்கு ரொம்ப நன்றி..)
    என்ன கொடுக்க நினைத்தீர்களோ அது சரியாக சேர்ந்ததாகவே என்னால் உணர முடியுது..

    ரொம்ப அருமையான கதை..
    (கதைனு சொல்றதை விட கொடுக்கப்பட்ட செய்தி)

    உங்களுடைய அடுத்த வருகைக்காக காத்திருக்கிறேன்..

    நிறைவான கதை கொடுத்ததற்கு நன்றிகள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் தாமரை...

      உங்களுடைய கருத்துகளுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      எமோஷனலாகக் கதையைக் கொண்டு செல்ல வேண்டாம் என்று கதை ஆரம்பிக்கும் போதே என் கணவர் சொன்னார். அதனாலோ என்னவோ அதிக அழுத்தம் தராமல் இயல்பாகக் கொண்டு சென்றேன்.

      கதையின் முடிவில் தவறாமல் வந்து உங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி தாமரை.

      நீக்கு
  4. ஹாய்ய்ய் அக்கா,

    ஏதேச்சையா கூகுள் ஆண்டவரை சேர்ச் செய்யும் போது தான் உங்கள் வலைதளம் பற்றி அறிந்தேன்.. தேங்க் காட்....

    ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம்... கடந்த இரண்டு வாரமா நேரம் கிடைக்கும் போதேல்லாம் உங்கள் கதையுடன் தான் பயணித்து கொண்டிருகிறேன்..


    காதலை மட்டுமே முக்கிய பங்காக எடுத்து கொள்ளாமல் பல கருத்துகளை... அதுவும் உருத்தாத வகையில்... கதையோடு சேர்த்து எங்களுக்கு அளிப்பதில் உங்களை மிஞ்ச யாருமில்லை அக்கா...

    சில சமயம் இப்படியும் இருக்குமோ.... ஆமா நான் ஏன் அந்த மாதிரி யோசிக்கலை.. ச்சே என்னை நினைத்தால்... இப்படி பல எண்ணங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் எனக்கு உணர்த்தி இருக்குறீர்கள் என்று சொன்னால் மிகையாகாது...

    Thanks a ton for a wonderful, lovely stories… :) :) :)

    பதிலளிநீக்கு
  5. ஹாய் நித்யா

    புதிதாக அறிமுகமாகும் ஒருவர் அக்கா என்று அழைப்பதைக் கேட்டுப் பல வருடங்களாகிவிட்டன. :) அந்த வார்த்தையைப் படித்ததுமே சந்தோஷமாக இருந்தது. நன்றிம்மா!

    உங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி நித்தி.

    பதிலளிநீக்கு
  6. I have read all your novels expect two. You have written effortlessly and without any complications. Neat writings. I like all your novels.best wishes.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ராணி. :)

      நீக்கு
  7. Hi, whether your novels hav been published? Which publisher? I want to have a collections of your novels.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் புத்தக வெளியீட்டைப் பற்றி யோசிக்கவில்லை ராணி. வெளியிட்டதும் நிச்சயம் தெரிவிக்கிறேன். ஆவலுடன் கேட்டதற்கு மிக்க நன்றிப்பா.

      நீக்கு
  8. Thanks for your reply. Your ongoing novel is superb with different background. ie oceanography is new to Tamol novel. It is very interesting.

    பதிலளிநீக்கு
  9. பாராட்டிற்கு மிக்க நன்றி ராணி. வித்தியாசமான துறையில் ஆர்வமுள்ள நாயகியாகக் காட்ட இதைத் தேர்ந்தெடுத்தேன்பா. உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி ராணி. :)

    பதிலளிநீக்கு
  10. What is so secret about Krishna s work? Jonathan also talks secreately . Why?

    பதிலளிநீக்கு
  11. அவளுக்கு சின்ன சர்ப்ரைஸ் இருக்கட்டுமேன்னுதான் ராணி. சீக்கிரமா உங்களோட கேள்விக்கான விடையைக் கொடுத்திடறேன்.

    பதிலளிநீக்கு
  12. Hi Samyuktha,

    I have read your novels, all are very fine.

    This novel is also very fine and I am very much waiting to know about secrets of Krishna.

    Nagalakshmi.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் நாகலஷ்மி,

      பாராட்டிற்கு மிக்க நன்றிப்பா.
      சின்ன சீக்ரெட்தான், பெரிய சஸ்பென்ஸ் எதிர்பார்க்காதீங்க.

      நீக்கு
  13. At last the secret is out. I myself feel the excitement in dharshini. Wonderfully written. Waiting for the next episode.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தர்ஷினியோட உணர்வுகள் சரியா இருக்கான்னு முழுமையாப் படிக்காமக் கூட போஸ்ட் பண்ணியிருந்தேன்.மிக்க நன்றிப்பா.

      நீக்கு
  14. Im new 2 ur blog sis.. ur completed novels are impressive... i lyk ur the ongoing novel vry much ... i haven't read a novel yet in this badis of oceanography.. the characters are really good (dharshu & krish).. hope so ill be regular visitor of ur blog from here... eagerly awaiting fr nxt update sis ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவிற்கும், கருத்துகளுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க. முடிந்த வரையில் விரைவில் அடுத்த பதிவைக் கொடுக்கிறேன்பா.

      நீக்கு
  15. romba nalla irukku unga nadai and neenga kudukira details neenga evalo menaketringannu kaathuthu, it was a pleasure to read ur work.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க. உங்களோட கருத்து எனக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்குது.

      நீக்கு
  16. பதில்கள்
    1. நன்றி ராணி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்பா. மேடம் எல்லாம் வேண்டாம். சாதாரணமாகவே சொல்லுங்கள்.

      நீக்கு
  17. ஹாய் சம்யுக்தா..
    மற்றும் ஒரு அருமையான கதைக்கு நன்றி சகோதரி..
    தர்ஷிணி - திருமணத்திற்கு முன் இருந்து அதன் பின் கிருஷ்-ஐ அறிந்து அவளிடம் ஏற்படும் மன மாற்றம், அதனை அவள் வெளிப்படுத்தும் விதம் என்று அனைத்தும் அருமை
    கிருஷ் - நல்ல, அனைவருக்கும் பிடிக்கும் கதாநாயகன். ஆனால் ஏனோ தர்ஷினி பாத்திரம் அமைந்த அளவிற்கு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. குறிப்பாக தர்ஷிணியோடு அவன் பழக ஆரம்பித்த பிறகு ஏதோ ஒன்று குறைவது போலவே தோன்றும். அதிலும் கடைசி அத்தியாயங்களில் அவனின் மனமாற்றம், அவளை ஏற்றுக்கொள்ளும் விதம் கதையை விரைவாக முடிக்க வேண்டும் என்று முடிக்கப்பட்டது போல் இருந்தது (குழந்தைக்கான ஏற்பு சரியாக இருந்தாலும், தர்ஷினியோடான அவனது சிறு வயது நிகழ்வு குறிக்கப்படாமல் பாதியிலேயே விடுபட்டது போல் இருந்தது). இவைகளைக் குறையாக சொல்லவில்லை, இதுவரை உங்கள் கதைகளில் ஏதோ ஒன்று குறைகின்றது என்று என்னால் எண்ண முடிந்தது இல்லை.

    உங்கள் அடுத்தத்தப் படைப்பிற்கு காத்திருக்கிறேன் :)
    வாழ்த்துக்கள் சகோதரி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் தாமரை...

      உங்களுடைய வரவை எதிர்பார்த்திருந்தேன். அதனால்தான் இன்னும் பிழைத் திருத்தும் வேலைகளைப் பார்க்கத் துவங்கவில்லை. உங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தாமரை.

      நீங்கள் சொன்ன கருத்தில் நிச்சயம் எனக்குமே உடன்பாடு இருக்கிறது. கதை பெரிதாகிக்கொண்டே செல்வதாலும், விரைந்து முடித்து விடலாமென்று ஒரு சிலவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் விட்டிருப்பது எனக்குமே புரிகிறது. சிறுவயது புகைப்படத்தைப் பார்த்து, தர்ஷினி கேலி செய்வது போலெல்லாம் யோசித்திருந்தேன். ஆனால், எழுதாமல் விட்டிருப்பது நீங்கள் சொன்ன பிறகுதான் நினைவிற்கு வருகிறது. கிருஷ்ணாவின் மாற்றங்களை ஆங்காங்கே சில வரிகள் சேர்த்து நீங்கள் சொன்ன குறைகளைக் களைய முயற்சிக்கிறேன் தாமரை.
      மிக்க நன்றிப்பா.

      நீக்கு
  18. Expected ending. I also endorse Thamarais comments. Krish s change of heart comes all of a sudden. However it is a feel good story. Want to read the in full format. Expecting your next novel eagerly. Best wishes.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய விமர்சனத்திற்கு மிக்க நன்றி ராணி. நீங்கள் சொன்னவற்றை நிச்சயம் கருத்தில் கொள்கிறேன். திடீரென்று ஏற்பட்ட மாற்றமாகத் தோன்றாதிருக்க, ஆங்காங்க சிறு மாற்றங்ககளைச் செய்கிறேன்.

      நீக்கு
  19. பதில்கள்
    1. நன்றி சித்ரா. கொஞ்சம் உடல் நலம் சரியில்லை. அதுவுமில்லாமல் எழுதும் ஆர்வம் வரமாட்டேன் என்கிறது. இன்றுதான் மனதிற்குள் அடுத்த கதைக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வருகிறேன்.

      நீக்கு
  20. Hi,
    உங்கள் கதைகள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    ஒவ்வொரு கதையும் Super-ஆக இருக்கிறது!
    எத்தனை முறை வேண்டுமென்றாலும் படிக்கலாம். அவ்வளவு அருமை! அழகாக எழுதுகிறீர்கள்!

    அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    Jaya

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரி, உங்களுக்கு பதிலளிக்க மறந்துவிட்டேன் ஜெயா. உங்களுடைய வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிப்பா. தொடர்ந்து வாசித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

      நீக்கு
  21. karkala megankal kku nnengal therivu seitha kathai kalam ennakku romba piditha onru , azhakaai thodandanki irukirathu , melum vasikka aavalaai irukiren
    chitra kailash

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துத் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி சித்ரா கைலாஷ்.

      நீக்கு
  22. karkala megankal kku nnengal therivu seitha kathai kalam ennakku romba piditha onru , azhakaai thodandanki irukirathu , melum vasikka aavalaai irukiren
    chitra kailash

    பதிலளிநீக்கு
  23. ஹல்க் சம்யுக்தா,, தலைப்பே அற்புதமாக இருக்கின்றது. கதை களம் இயற்கை விவசாயம். ஆவலுடன் அடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. hai samyuktha ethechaiyaha ladyswing log in pannumpothu ungalin vidiyal padithen . very nice romantic novel i like it . Ithanai naala eppadi ungalodo novels i miss paninen theriyala . Ippa ungaloda ella novels iyum thedi padika poren. Thank u for ur excellent writing

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துரையிட்டதற்கும் மிக்க நன்றி பானுமதி. உங்களோட மின்னஞ்சல் முகவரி அனுப்புங்க. எந்த நாவல் வேணும்னு சொல்லுங்க. அனுப்பி வைக்கிறேன்.

      நீக்கு
  25. samyuktha ungaloda novels pdf tharamudiyuma please & adv thanks

    பதிலளிநீக்கு
  26. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. hai i need kalaiyatha kanavugal, karai thodum alaigal, novels. karkala megankal novel enge padipathu pl sollungapa.

    பதிலளிநீக்கு
  28. Dear Samyuktha, I am addicted to your books. I read all six completed books this past week. Everytime I read a book, I find some shortfall. In your books I do not find any. They are so informative, shows the depth of your research. Keep up the good work and please write many more stories. I love your stories. Thank you so much. All the best for your future publications. Lots of love - Thabo

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி தபு.
      உங்களுடைய மனம் திறந்த பாராட்டும்,வாழ்த்தும் உற்சாகத்தைத் தந்தது.
      நன்றிப்பா

      நீக்கு
  29. Dear samyuktha,
    ungal novel kaan thendi uraikindren padithen!!mind=blown!
    I was a having a feeling that story shouldnt end.Awesomeness is one word.Dharshini and krish arumai!sundharesan thatha mikka arumai!aana kandipa oru epilogue kudunga!kadhai thidir endru mudintha mathri irunduchu!
    krishyin manamatram,krish and dharshiniyin manavazhkai matrum avargalin kadhal matrum avargal kuzhanthaigal endru kudhal nandraga irukum!
    ungal pani thodra vazhthukal!!
    ipadiku ungal ezhuthin kadhali,
    kavitha

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கவிதா.
      உங்கள் விருப்பப்படி, எபிலாக்கோடுதான் புத்தகம் வெளிவரும்பா. குட்டி தர்ஷினி, கிருஷ்ணாவை நிறையப் பேச வைப்பதை எழுதிவிடுகிறேன்.

      வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கவி.

      நீக்கு
  30. Hi Samyuktha,

    I posted the below review in my Facebook, Ladies wings, readers writers group last night. Wasn't sure if you are in fb, hence sharing the same here with you.

    �� சம்யுக்தாவின் �� கலையாத கனவுகள் ��

    சம்யுக்தா --- இவர் எழுதிய கதைகளில் இதுவரை நான்கு கதைகளை வாசித்திருக்கிறேன்.
    இரு துருவங்கள், கரை தொடாத அலைகள், அதிதி, தண்டாரணியம்.

    இது ஐந்தாவது.. ஒவ்வொரு கதையிலும் இவர் எழுதும் விதம் வியப்பில் ஆழ்த்துகிறது! அது மட்டுமல்ல.. இவர் எழுத்துக்களின் பால் மேலும் கவரப்படுகிறேன்!

    ஒரு கதைக் கருவை எடுத்துக்கொண்டு, தன் ஆழ்ந்த சிந்தனையுடன் அலசி ஆராய்ந்து, நமக்கும் புரியும் வகையில் இயன்ற அளவு எடுத்துக் கூறுவார். நிறைய விடயங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். ������������
    காதலுக்கும் குறைவிருக்காது. கதைக்கருவிற்கு ஏற்றார் போல் காதல், ரொமான்ஸ் பற்றி இவர் எழுதும் விகிதம் வேறுபட்டிருக்கும்.

    இந்தக் கதையில் நாம் கட்டிடக்கலை நிபுணர்களான லாரஸ், சைதன்யா, ரிதன்யாவுடன் பயணிப்பதால் கட்டிடக்கலையின் தொன்மையான விடயங்களைப் பற்றியும், சிறப்புகளைப் பற்றியும், தற்போதைய கட்டிடக்கலை நுணுக்கங்களையும் தெரிந்து கொள்கிறோம். வாஸ்து பற்றியும் பேசுகிறார்கள். சில பிரான்ஸ் நாட்டின் கலாசாரமும், பாண்டிச்சேரி, மதுரை பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இது என்ன.. காதலும் ரொமான்ஸும் உண்டா, இல்லையா என யோசிக்கிறீர்களா? கண்டிப்பாய் நிறைய இருக்கு.. இவரின் அதிதி, தண்டாரணியம் இந்த இரு கதைகளை விட, மிக மிக அதிகமாக இருக்கு. அதுவும் பிரான்ஸ் நாடு என்றாலே கட்டிடக்கலையைப் பற்றிய வியப்பும் முத்தமும் காதலர்களும் தானல்லவா?

    பதிலளிநீக்கு
  31. ரிதன்யா, சைதன்யா, லாரஸ் - இவர்களின் ஈர்ப்பு, காதல் எங்கு எவ்வாறு தொடங்குகிறது? யார் முதலில் காதலிப்பதாகக் கூறுவது? இது முக்கோணக் காதலா? யார் விட்டுக் கொடுப்பது? யார் இணைகிறார்கள்? ஏன்? எப்படி? கதாசிரியரின் கதை சொல்லும் விதம் அருமை! ������ நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    என்ன தான் முடிவு எடுக்கப்படும் விதம் justify செய்யப்பட்டு இருந்தாலும், அந்த மூன்றாம் நபருக்காக மனதில் ஒரு வலி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. கடைசியில் கொட்ட கொட்ட ரொமான்ஸ் இருந்தாலும், விட்டுக் கொடுத்த நபரின் நினைவு வருத்தத்தை தந்தது என்னவோ உண்மை. ஆனால், அப்படி விட்டுக் கொடுக்க நினைக்கும் நபரின் காதலுக்குரியவருக்கு அந்தக் காதல் பற்றி கடைசி வரை தெரியாமல் போவது பரிதாபம் தானென்றாலும், அப்படி தெரியாமல் இருப்பதால் தான் பாதிப்பும் குறைவு.

    காதலை தக்க வைத்துக் கொள்ள கொஞ்சம் சுயநலம் தேவை தானோ? காலத்தோடு செய்யாத செயல்களின் விளைவு? விலை மதிப்பில்லாதது!

    கதாப்பாத்திரங்களின் வடிவம் அருமை.

    ஆண்களின் மனப்போக்கு, பெண்கள் தங்களுக்கே விதித்துக் கொள்ளும் கட்டுப்பாடுகள், ஓர் இழப்பினால் ஏற்படும் பாதிப்பு, அதனால் விதித்துக் கொள்ளும் கட்டுப்பாடு, குடும்பத்திற்கான வாழ்க்கைப் போராட்டம், முன்னேற்றத்திற்கான கடின உழைப்பு, முற்போக்கு சிந்தனை இல்லாவிடினும் காலத்திற்கு ஏற்றவாறு மாறி மகனின் மகிழ்ச்சிக்காக பார்க்கும் பெற்றோர், உயிர் நண்பன் அன்பழகனின் அன்பும் வேதனையுடன் சிந்தும் வார்த்தைகளும்.. சைதன்யா அவனுக்கு விளங்க வைக்கும் விதம், காதல் பற்றிய அவனின் எண்ணம், குழப்பம், பின்னர் தெளிந்து கொள்ளும் விதம் அனைத்தும் அருமை.

    இன்னொரு புறம் சொட்ட சொட்ட நினைய வைக்கும் காதல்.. அதீத திறமை, நடந்து முடிந்த சம்பவங்களால் ஏற்படும் குழப்பத்தில் சிக்கி இருக்கும் காதல், அந்தக் காதலில் உறுதியும் நம்பிக்கையும் வைத்துத் தள்ளி நின்று காத்திருக்கும் பொறுமை, சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் திறமை.. பொறுமை மட்டுமின்றி பெருந்தன்மையுடன் பழைய சம்பவங்கள் பற்றி ரிதன்யா புரிந்து கொள்ள சைதன்யா மேல் தவறு இருக்க முடியாது எனக் கூறும் லாரஸ்..

    ரிதன்யாவின் கதாப்பாத்திரம் அழகானது. அவளின் தைரியம், சைதன்யாவிடம் காட்டும் அலட்சியப் போக்கு, லட்சியத்தை எட்டும் விதம், பாசம், பரிவு, பழகும் விதம், தன் மனதை கவர்ந்தது சைதன்யாவா இல்லை லாரஸா என குழப்பம் கொண்டு தவிப்பது..
    தந்தையுடனான அவளின் நெருக்கமும், தந்தை அவளுக்காக செய்யும் அத்தனையும் ரியலி சூப்பர்ப்!

    இன்னொரு விடயம்... என் மனதில் இருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இது என்று சொல்லலாம். ��

    எப்போதும் தொடர் பாகங்கள் என்ற கான்செப்ட்டில் அவ்வளவு இன்டெரெச்ட் இருக்காது. முதல் பாகத்தில் இருக்கும் தாக்கம் அடுத்து வரும் பாகங்களில் வருவது எளிதல்ல என நினைப்பேன்.
    ஆனால் சில கதைகள் முடியும் போது மிக அபூர்வமாக தோன்றும் எண்ணம்... நேற்றில் இருந்து என் மனதில் அடுத்து சைதன்யாவிற்காக சம்யுக்தா இது போல் அழகான கதை ஒன்றை உருவாக்கினால் என்ன என்று தோன்றுகிறது... ��

    மூன்று இரவுகளில் வாசித்துவிட்டு, இதோ நான்காவது இரவில் கதைக்கான எனது பின்னூட்டத்தை பதிவிடுகிறேன். காலம் கடந்தால் பின்னர் பின்னூட்டம் தர முடியாமல் கூட போகலாம் என்ற எண்ணத்தில் உடனே பதிந்தும் விட்டேன். ��������

    நன்றி!
    ஆர்த்தி ரவி

    பதிலளிநீக்கு
  32. ஹாய் ஆர்த்தி

    சமூக வலைத்தளங்களில் நான் அதிகம் வருவதில்லை. முகநூலில் அவ்வப்போது எட்டிப் பார்ப்பேன். இதயத்தின் சுகம் நீ நாவலின் எழுத்தாளர் தானே நீங்கள். உங்களின் புகைப்படத்தோடு கூடிய அட்டையைச் சில நாள்களுக்கு முன்பு பார்த்தேன். வாழ்த்துகள் ஆர்த்தி.

    கதையைப் படித்ததோடு அல்லாமல், வாசிக்கத் தூண்டும் வகையில் அழகாக விமர்சனமளித்தற்கு மிக்க நன்றி.

    கதை மாந்தர்களின் பாத்திரப் படைப்பையும், அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டையும் அழகான வார்த்தைகளால் விமர்சனம் செய்தமைக்கும் மிக்க நன்றி.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு, லாரஸோடும், சைதன்யனோடும் என்னைப் பயணிக்க வைத்து விட்டீர்கள்.

    சைதன்யனை நாயகனாக வைத்து ஒரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன். ஏதோ ஒரு நீண்ட இரயில் பயணத்தில், மனதோடு யுத்தம் எனும் தலைப்பில் முழுக்கதையையும் உருவாக்கினேன். ஆனால், பாகம் பாகமாக வெளிவரும் கதைகளைப் பார்க்கவே எனக்கு தலை சுற்றும். அதே கொடுமையை நானும் செய்வதா என்று அப்படியே நிறுத்தி விட்டேன். நீங்கள் கேட்டதுமே, மீண்டும் எழுதவேண்டுமென்று தோன்றுகிறது. ஓரிரு கதைகளுக்குப் பிறகு, முந்தைய கதையின் சாயல் அதிகம் இல்லாமல் நிச்சயம் எழுத முயற்சிக்கிறேன்.

    உங்களின் வருகைக்கும், மனம் திறந்த பாராட்டிற்கும், உறக்கத்தைத் தொலைத்து வாசித்ததோடு மட்டுமின்றி வாசிக்கத் தூண்டும் வகையில் விமர்சனம் செய்ததற்கும் மிக்க மிக்க நன்றி ஆர்த்தி.

    பதிலளிநீக்கு
  33. hi samyuktha, i am writing to you the first time. i have read all your novels. oh my god. excellent they are. i m verocious tamil novel reader from the age of 10 and for last 35 years now. your writings are too good to write the review or comments by me. i cant imagine that your are new writer for past some years. your novels so matured writing and depth informative and free flowing of thoughts and emotional too. i would be comfortable if i can express my views in tamil. i will find a way and write to you soon. i have a lot to appreciate and express thanks vasumathi

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் வசுமதி

      உங்களுடைய கருத்து ஸ்பேமில் இருந்தது. கவனிக்காததால், உடனடியாகப் பதிலளிக்க முடியவில்லை.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி. அதுவும், மிக நீண்ட கால தமிழ் நாவல்களின் வாசகியிடமிருந்து இது போன்ற பாராட்டுப் பெறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

      உங்கள் அளவு இல்லையென்றாலும், நானும் நீண்ட கால வாசகி. கொஞ்சம் தெளிவாக எழுதுவதற்கு அதுதான் கைகொடுக்கிறதென்று நினைக்கிறேன்.

      HTML code கிடைத்தால், ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி மாறி டைப் செய்யுமாறு பிளாக்கில் மாற்றம் செய்கிறேன் வசுமதி. உங்களின் விரிவான கருத்துகளைத் தெரிந்து கொள்ள நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி.

      நீக்கு
  34. Hi samyuktha nan unga naavalum padichen . l like the way of your writing. Vazhkayda yatharthatthai ezhutharinga. Our oru naavalum mudincha pinna masukkul our niraivu irukku.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் தாரா

      வருகைக்கும், மனதில் தோன்றியதைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிப்பா. :)

      நீக்கு
  35. ரொம்ப நன்றி சம்யுக்தா,கதையை தொடர்ந்து எழுத ஆரம்பித்தற்கு. மிகவும் அருமையான பதிவுகள் ். இயற்கை விவசாயத்துடன் இணைந்த family oriented கதை். Story moves on interestingly. அடுத்த பதிவு எப்ப வரும். Eagerly waiting.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப காத்திருக்க வைக்கிறேன் ராணி. எனக்கே பொறுமை போயிடுச்சுங்க.
      கருத்துக்கு நன்றிப்பா.

      நீக்கு
  36. E16 நன்றாக இருந்தது. Waiting is not a problem. Take your own time.
    😌😌😌

    பதிலளிநீக்கு
  37. சம்யூ, உங்க கதைகளை download செய்து offline ல் படிக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலோமியாவில் டவுன்லோட் ஆப்ஷன் கொடுக்க முடியவில்லை ராணி. உங்க மெயில் ஐடியை எனக்கு மெயில் பண்ணுங்க. பிடிஎஃப் அனுப்புகிறேன்.

      நீக்கு
  38. My e mail id ranig56@gmail.com. If you trfr it to my email,whether I can save it and read offline?

    பதிலளிநீக்கு
  39. Hey Samyu,என்னப்பா உங்க ஹீரோயின் வில்லன் வேலை எல்லாம் செய்கிறாள்.
    Usual a heroஅவை தான் நல்லவனா or கெட்டவனா என்று கேட்ப்பார்கள்..
    நீங்க என்ன உங்க ஹிரோயினை இப்படி portrait பண்ணறீங்க . She is very different from normal heroine. மனதில் நிற்கும் கதாபத்திரத்தில் அவத்தி. 👌👌👌👌

    பதிலளிநீக்கு
  40. Dear samyutka. Please come qith next update plz.. waiting for story

    பதிலளிநீக்கு
  41. Hi madam have u published the completed the novel kaarkaala mekangal?pls send the the rest episodes from 18.pls waiting

    பதிலளிநீக்கு
  42. உங்க நாவல்கள் எங்கு படிக்கலாம் சகோ

    பதிலளிநீக்கு