புதன், 6 ஜூன், 2018


நண்பர்களே

என்னுடைய கதைகளைப் படிக்க விரும்புபவர்கள் அமேசான் கிண்டிலில் படித்துக் கொள்ளுங்கள். இலவசமாகக் கொடுக்கப்படும் எந்த ஒரு பொருளும் தரம் குறைந்ததாகப் பார்க்கப்படுவதை உணர்ந்ததாலும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் படிப்பதற்கு வழியில்லையென்று சொல்வதாலும், புத்தகங்கள் வெளியிடுவதில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டவும் தான் இந்த மாற்றம்.

கார் கால மேகங்கள்       : https://www.amazon.in/dp/B07BK556QM
கரை தொடும் அலைகள் : https://www.amazon.in/dp/B07BJMMV8R
மாயத் தூரிகை                 : https://www.amazon.in/dp/B07BJL6RRQ
கலையாத கனவுகள்       : https://www.amazon.in/dp/B07DB5KN71

எஞ்சியிருக்கும் நாவல்களையும், அடுத்து வெளிவரவிருக்கும் அலையாத்தி என்னும் நாவலையும் நேரம் கிடைக்கும் போது பதிவேற்றம் செய்கிறேன்.

மற்றொரு முக்கிய அறிவிப்பு:

     பிடிஎஃப் களைக் கேட்பவர்களுக்குக் கொடுப்பதும் கொடுக்காததும் என்னுடைய சொந்த விருப்பம். அதனால், இணைய தளம் என்ற பெயரில் மற்றவர்களின் உழைப்பின் மூலம் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள், என்னுடைய புத்தகங்களைப் பதிவேற்றம் செய்யும் மிகப் பெரிய சேவையைச் செய்ய வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மீறிச் செய்தால்,

     1.  எவ்வளவு செக்யூரிட்டி இருந்தாலும், உங்களின் தளங்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.

    2. பல ஆயிரங்களைச் செலவழித்து, புதுப்புது தளங்களை உருவாக்கி, நாவல்களைப் பதிவிடுவதை வேலையாக வைத்திருந்தால், உங்களின் தளங்களை முடக்கும் புராக்ராம்கள் எழுதுவதை வேலையாகச் செய்ய முடியும்.

   3. நீங்கள் ஸ்கேன் செய்யும் நேரத்திற்குள் உங்களின் .பி. முகவரி மட்டுமல்ல, ஆதார் எண் வரை மிக எளிதாகக் கண்டறிந்து, உங்களின் புகழைப் பரப்ப முடியும்.

    4. மற்றவர்களின் எழுத்தை வைத்து நீங்கள் சம்பாதிப்பதைப் போல, உங்களின் புகைப்படங்கள் முதற்கொண்டு எதை வேண்டுமானாலும் உங்களிடமிருந்து திருடி எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் உலவ விட முடியும்.

 இன்னும் என்னென்ன செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவென்று உங்களுக்கே நன்கு தெரியும். வாய் வார்த்தையாக எதையும் நான் சொல்வதில்லை, என்னால் முடியுமென்பதை மட்டும்தான் சொல்வேன்.

 எதையும் செய்யாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், உங்களுக்குத் தெரியாத எதிக்ஸ் எனக்குத் தெரியும் என்பதால்...  அதனால், உங்களின் சேவையை இத்துடன் நிறுத்திவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

திங்கள், 1 ஜனவரி, 2018

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

‘மாயத்தூரிகை’ புத்தக வடிவில்...

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

நண்பர்களே...

கார்கால மேகங்கள் நாவலைத் தொடரச் சொல்லி சிலர் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்தீர்கள். சமீக காலமாக ஆன்லைனில் நான் அதிகம் வராத காரணத்தால், அனைவருக்கும் பதிலளிக்க முடியவில்லை. உரிய நேரத்தில் பதிலளிக்காததற்கு மன்னியுங்கள். உங்களின் ஆதரவிற்கும், காத்திருப்பிற்கும் என் மனமார்ந்த நன்றி!

கார்கால மேகங்கள் நாவலை பிளாக்கில் தொடராமல், நேரடியாகப் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். புத்தகத்தின் அட்டைப்படம் உங்களின் பார்வைக்கு...


ஞாயிறு, 16 ஜூலை, 2017

நண்பர்களே...

எனது கரை தொடும் அலைகள் நாவல், வாகை பதிப்பகத்தின் மூலம் புத்தக வடிவில் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 நாவல் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தை என்னுள் விதைத்த ஷெண்பா பாலச்சந்திரன், வரிக்கு வரி விமர்சனம் செய்து என் எழுத்தை மெருகேற்ற உறுதுணையாக இருக்கும் வனிதா ரவிச்சந்திரன், தொடர் மின்னஞ்சல் மூலம் ஊக்கப்படுத்திய அமுதா பிளாக் நண்பர்கள், லேடீஸ் விங்ஸ் தளத்தில் எழுத அழைத்து புதிய வாசகர்களை அறிமுகப்படுத்திய மஞ்சுளா செந்தில்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போது புத்தகம் வெளியிடப் போகிறீர்கள் என்று அறிமுகமான நாள் முதலாய்க் கேட்டு, புத்தகம் வெளியிடும் எண்ணத்தைக் கொண்டிராத என்னை வெளியிடத் தூண்டிய மல்லிகா மணிவண்ணன், தமிழ் மதுரா, ஸ்ரீ லக்‌ஷ்மி சகோதரிகள், கோகிலா, ஹமீதா, மேக்னா உள்ளிட சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! 

அறிமுக எழுத்தாளர் என்ற முறையில் புகழ்பெற்ற பதிப்பகங்களுக்குள் நுழைவது மிகச் சிரமம் என்பதையும், புதுப் பதிப்பகம் ஆரம்பித்து இருநூறு புத்தகங்களைக் கூட விற்க முடியாது என்ற நிதர்சனத்தைச் சொல்லி, புத்தகம் வெளியிடுவதைப் பற்றிச் சிந்திப்பதையே தவிர்த்திருந்த போது, மணிக்கணக்கிலான விவாதத்திற்குப் பின் சென்னை புக் ஃபேருக்குள் வெளியிடுகிறேன் என்று என் மூலமே சொல்ல வைத்த நண்பர் சிபிக்கும், எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் பேசி விரைவில் புத்தகம் வெளியிடத் தூண்டுகோலாக இருந்த தேவிப் பிரபா அக்காவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

அறிமுகமானவர்களிடமிருந்தும், குடும்ப நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் தாண்டி என்னை ஆன்லைன் எழுத்தாளராக்கியதில் பெரும் பங்கு வாசகர்களாகிய உங்களைத்தான் சேரும். பல்வேறு காலகட்டங்களில், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துரையிட்டு ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள். 

ஜாஷ், நிதா, வை ஸ்ரீ, கீதா, ராதா விஷ்வா, ராஜி, தேனு, ரதி, ஸ்வாதி, மாயா உள்ளிட்டவர்களின் தொடர் விமர்சனங்கள் மூலம் தான் என் பயணம் தொடங்கியது.அதற்குப் பின் நிறையப் பேர் தொடர் கருத்துரைகள் மூலமும், மின்னஞ்சல்கள் மூலமும் என்னை எழுதத் தூண்டி வருகிறீர்கள். அனைவரின் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், இந்தச் சந்தர்ப்பத்தில் அனைவரையும் நினைவுகூர்ந்து, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!
தற்போது அச்சில் உள்ள கரை தொடும் அலைகளின் அட்டைபடம் உங்களின் பார்வைக்கு….

வியாழன், 17 மார்ச், 2016

கார்கால மேகங்கள் - மூன்றாவது அத்தியாயம்